Home செய்திகள் வவுனியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவம்

வவுனியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவம்

வவுனியாவிலுள்ள கிறிஸ்தவ தேவலாயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின ஆரதானையின் போது இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலினால் பல பொதுமக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக தற்போது நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் மற்றும்  காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

01 8 வவுனியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவம்

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள் வருகின்ற 4ஆம் திகதி தேவாலயங்களில் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கையில் உள்ள அனைத்து தேவாலயங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இராணுவம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version