வன்னியில் 19 அரசியல் கட்சிகள் 34சுயேட்சை குழுக்கள் வேட்புமனுதாக்கலை செய்தன. 10 மனு நிராகரிப்பு!!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னிமாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று மாலைவரை 19 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயேட்சை குழுக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இலங்கை தமிழரசுகட்சி,தமிழ்மக்கள் தேசிய கூட்டணி, இலங்கை சோசலிகட்சி,ஜனநாயக இடதுசாரி முண்ணனி,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,,பொதுமக்கள் முன்னணி,, ஈழமக்கள் ஜனநாயக கட்சி,ஜனசெதபெரமுன,சிங்கள தீப ஜாதிகபெரமுன,தமிழர் ஜக்கியசுதந்திர்முண்ணனி,தேசிய மக்கள்சக்தி,தமிழர் சமூக ஜனநாயக கட்சி,மௌவிம ஜனதாகட்சி,ஜக்கியதேசியகட்சி,எக்சத் பெரமுன,ஜக்கிய மக்கள் சக்தி,தமிழர் விடுதலை கூட்டணி,முன்னிலை சோசலிசகட்சி,எங்கள் மக்கள்சக்தி கட்சிஓ
ஆகிய அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சை குழுக்களும்
தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

12ஆம் திகதி முதல் 19ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த நிலையில்,இன்று மதியம்12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளபட்டிருந்தமை குறிப்பிடதக்கது..

இதேவளை முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கினைஸ் பாரூக்,ஆகியோர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கியமக்கள் சக்தியில் போட்டியிடுவதற்காக நேற்றயதினம் வேட்புமனுவினை தாக்கல் செய்ததுடன், விடுதலை புலிகள் மக்கள் பேரவையில் போட்டியிடும் முன்னாள் மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் சுயேட்சைகுழு சார்பாக நேற்றயதினம் வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.