Tamil News
Home செய்திகள் வடக்கு, கிழக்கில் விமான நிலையங்கள் தரமுயர்த்தப்படுகின்றன

வடக்கு, கிழக்கில் விமான நிலையங்கள் தரமுயர்த்தப்படுகின்றன

பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை விமான நிலையங்களை வணிக விமான சேவைகளை நடத்துவதற்காக அவற்றை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்கீழ் மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவும், இரத்மலானை விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக வசதி செய்வதற்கும், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, பலாலி விமான நிலையத்தில் இருந்து, இந்திய துணைக் கண்டத்துக்கான பிராந் திய விமான சேவைகளை வரும் செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்  சுமார் 70 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களைத் தரையிறக்கும் வகையில், பலாலி விமான நிலைய ஓடுபாதை தரமுயர்த்தப்படும். இங்கிருந்து முதலாவது விமானம் செப்ரெம்பர் மாதம் சேவையை ஆரம்பிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.

தென்னிந்தியாவில் சென்னை போன்ற இடங்களுக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்காக நாம் பணியாற்றிக் கொண் டிருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.பலாலி விமான நிலையத்தை சுமார் 110 மில்லியன் டொலர் செலவில் தரமுயர்த்தும் பணிகள் கடந்த மாத தொடக்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தியின் மூலம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை நீர்த்துப்போகச் செய்யவும் சிறீலங்கா அரசு எடுத்துவரும் முயற்சியில் இதுவும் ஒன்றாகும் என கருதப்படுகின்றது.

 

Exit mobile version