வடக்கு ஆளுநரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்! காரணம் என்ன?

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அரச நியமனம் வழங்கக் கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டள்ளனர். வடமாகாணத்தில் நீண்டகாலமாக கடமையாற்றி வருகின்ற நிலையிலும் நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தும் நியமனங்களை வழங்க வலியுறுத்தியுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,

நியமனத்தை வழங்க கோரி பல்வெறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநர்களாக புதிது புதிதாக வருகின்ற பலரையும் சந்தித்துள்ளோம்.

ஆகவே தற்போது புதிய ஆளுநராக வந்திருக்கின்றவர் எங்களுக்கான நியமனங்களை உரிய முறையில் விரைவாக வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் தொண்டர் ஆசிரியர்கள் ஈடபட்ட போதும் அலுவலகத்தி ஆளுநர் இல்லாத காரணத்தினால் ஆளுநரின் ஊடக செயலாளர் எஸ்.முகுந்தன் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது எதிர்வரும் புதன்கிழமை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுமென வழங்கிய வாக்குறுதியையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.