Tamil News
Home செய்திகள் வடக்கில் மேலும் 27 பேருக்கு கொரோனா – சிறைச்சாலையில் 5 பேருக்கும் தொற்றியது

வடக்கில் மேலும் 27 பேருக்கு கொரோனா – சிறைச்சாலையில் 5 பேருக்கும் தொற்றியது

வடக்கு மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 20 பேர் யாழ். மாவட்டத்திலும் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்திலும் 6 பேர் வவுனியா மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 368 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ்.போதனா வைத்திய சாலையில் 20 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவர்களில் 27 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் 20 பேருக்கு கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் நேற்றுமுன்தினம் சுன்னாகத்தில் கண்டறியப்பட்ட இலங்கை வங்கி ஊழியர் ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்கள்.

மேலும் இருவர் இ.போ.சவின் யாழ்ப்பாணம் – கோண்டாவில் சாலையில் கண்டறியப்பட்டுள்ளனர். அங்கு 30 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் ஒருவர் சாரதி பயிற்றுவிப்பாளர். மற்றையவர் சாலை அலுவலகத்தில் பணியாற்றுபவர்.

மேலும் மூவர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் யாழ். பல்கலைக்கழகத்தில் மார்ஷல் பதவியில் உள்ளவர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள். மற்றயவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பணியாற்றுபவர்.

யாழ். நகரில் கே.கே.எஸ் வீதியில் கருவாட்டுக் கடை நடத்தும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேலும் 5 கைதிகளுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இ.போ.சவின் காரைநகர் சாலையில் மேலும் 2 நடத்துநர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர எல்லையில் உள்ள இராணுவ முகாம் சிப்பாய் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை மெலிஞ்சினைமுனையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவருக்கு தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் வெளிநாடு செல்வதற்காக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்கள். ஒருவர் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டபோது மாதிரிகள் பெறப்பட்டவர்.

செட்டிக்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார

Exit mobile version