லிபிய கடல் பகுதியில் கப்பல் விபத்து -74 குடியேறிகள் பலி

லிபிய கடல் பகுதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 74 குடியேறிகள்/ அகதிகள் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
விபத்தில் ஏற்பட்ட இக்கப்பலில் 120க்கும் அதிகமானோர் பயணித்த நிலையில், 47 பேரை லிபிய கடலோர காவல்படையும் மீனவர்களும் மீட்டிருக்கின்றனர்.
கடந்த ஒன்றரை மாத காலத்தில் மத்திய தரைக்கடலில் இவ்வாறு எட்டு விபத்துகள் நிகழ்ந்துள்ளன.