லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்குற்ப்பட்ட 12 கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானம்.

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பொலன்னறுவை-லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்குற்ப்பட்ட 12 கிராமங்களை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் இந்த 12 கிராமங்களுக்கும் சென்றிருக்ககூடும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து,இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.