ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: மியான்மர்- வங்கதேசம் இடையேயான பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை மியான்மரில் நிலவும் இராணுவ ஆட்சி சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றது.
மியான்மரில் இடைக்கால அரசாங்கம் தனது முழுமையான செயற்பாட்டை தொடங்கியதும் பேச்சுவார்த்தை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என மியான்மர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.