Tamil News
Home செய்திகள் ராஜித சேனாரட்ண எந்தவேளையிலும் கைதாகலாம்! பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது

ராஜித சேனாரட்ண எந்தவேளையிலும் கைதாகலாம்! பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண எந்த வேளையிலும், கைது செய்யப்படலாம் எனத் தெரிகின்றது. அவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்து நீதிமன்றத்தினால் இன்று மாலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு குறித்தான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதேவேளை ராஜித்தவை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு மேலதிக நீதவான் சி ஐ டியினருக்கு வழங்கியுள்ளார்.இதன்படி ராஜித்த உடனடியாக கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version