Tamil News
Home செய்திகள் யாழ். மாநகரசபை மேயர் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்

யாழ். மாநகரசபை மேயர் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்

யாழ் மநாகர சபை மேயர் மணிவண்ணன் பயங்கவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம்.
என தமிழ்த் தேசிய மக்கள் முனன்ணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தனது ருவிற்றர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நேற்றிரவு 8.00 மணியளவில் விசாரணைக்காக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிவண்ணன்  ஆறு மணிநேர விசாரணையின் பின் இன்று அதிகாலை 2.00 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
யாழ். மாநகரசபை காவல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அணிந்திருந்த சீருடைகள் யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடைகள் போன்றவை என்பது உறுதியாகியுள்ளதால், புலிகளையும் அவர்களது கொள்கைகளையும் ஊக்குவித்தமைக்காக மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்  என  காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version