Home செய்திகள் யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது கொலை வெறித் தாக்குதல் – வட்டுக்கோட்டை பொலிஸ் மீது மீண்டும்...

யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது கொலை வெறித் தாக்குதல் – வட்டுக்கோட்டை பொலிஸ் மீது மீண்டும் முறைப்பாடு

human right யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது கொலை வெறித் தாக்குதல் - வட்டுக்கோட்டை பொலிஸ் மீது மீண்டும் முறைப்பாடுயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், தனது உயிரை காப்பாற்றுமாறு தஞ்சம் அடைந்துள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்தே பல்கலைக்கழ மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், தனது உயிரை காப்பாற்றுமாறு தஞ்சம் அடைந்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வட்டுகோட்டை பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞனே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடளித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டில் சிவில் உடையணிந்த பொலிசார் வீதியில் வைத்து தன்னை தாக்கியதாகவும், பின்னர் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சிறிய அறைக்குள் வைத்து தாக்கியதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சில மாதங்களின் முன்னர் சித்தங்கேணியை சேர்ந்த இளைஞன் ஒருவரை அடித்து கொன்ற குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை பொலி நிலையத்தை சேர்ந்த பொலிஸார் சிலர் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version