Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையப் பணிக்கு தென்னிலங்கையர் நியமனம்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையப் பணிக்கு தென்னிலங்கையர் நியமனம்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி திறக்கப்படவுள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளுக்கு 93 சிங்கள இளைஞர்கள், யுவதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில்கூட தமிழ் மாகாணத்திலேயே எமது இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

 

 

 

Exit mobile version