இந்திய இழுவைப் படகுகளின் வரவு அதிகரித்துள்ளது. நேற்றுமுன் தினம் இரவும் இந்திய இழுவை படகுகளால் எமது மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டன. இது தொடர்ந்து சில நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தவிடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் அதனை யாரும் செவிமடுப்பதில்லை.
இது தொடர்ந்து நடந்தால் யாரையும் நடமாட விடமாட்டோம். அரசாங்கம் எங்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கிறது. மேலும், இத்தியா தனது கடற்படையை எல்லையில் போட்டால் அவர்களின் ட்றோலர் இங்கு வராது. எனவே, இந்திய ட்றோலர்களை எல்லை தாண்டுவதை கண்டித்து யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் செவ்வாய்க் கிழமை முற்பகல் 10 மணிக்கு முற்றுகையிடப்படும்” என்று அவா்கள் தெரிவித்தனா்.