யாழ்ப்பாணத்தில் 55 பேர் உட்பட வடக்கில் 74 பேருக்கு நேற்று கொரோனா தொற்றுறுதி

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 74 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக ஆய்வு கூடம் என்பவற்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 55 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.