Tamil News
Home செய்திகள் யாழ்.பல்கலைக் கழகத்தில் பதற்றம்- காவல்துறையினர் குவிப்பு

யாழ்.பல்கலைக் கழகத்தில் பதற்றம்- காவல்துறையினர் குவிப்பு

யாழ் பல்கலைக் கழகத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்டமுறுகல் நிலையை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

பல்கலைக் கழக வாயிலில் கறுப்புடையணிந்த மாணவர்கள் காணப்பட்டவேளை, காவல்துறையினர் அவர்களை பல்கலைக்கழகத்திற்குள் செல்லுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்தே முறுகல் நிலை உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக காவல்துறையினர் அப்பகுதிக்கு அழைக்கப்பட்ட நிலையில், மேலும் குழப்பமான நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இராணுவத்தினரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளதைத் தொடர்ந்து பதட்டமான சூழல்உருவாகியுள்ளது.

யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இன்று தியாகி தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version