யாழில் போதகரைச் சந்தித்தவர்களாம்: நானாட்டானில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

மடு மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரின் ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னும் சந்தேகத்தில் குறித்த 11 குடும்பங்களும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படு கின்றது.

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த போதகர் ஒருவர் கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மத போதனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அந்தப் போதகர் மீண்டும் சுவிஸ் நாட்டிற்குத் திரும்பிச் சென்ற நிலையில் அந்தப் போதகருக்கு “கொரோனா’ நோய்த் தொற்று உள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இருந்தும் பலர் அந்த கூட் டத்திற்கு சென்றுள்ளார்கள் என்று சுகாதார துறையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட மடுக்கரை மற்றும் அச்சங்குளம் கிராமங்களில் 5 குடும்பங்களும், மடுப்பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட தேக்கம் கிராமத்தில் 6 குடும்பங்களும் அடையாளம் காணப்பட்டன.

அதனையடுத்து அவர்களை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டுள்ளனர். இந்த 11 குடும்பங்களும் அவர்களுடைய வீடுகளிலே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் அந்த கூட்டத்தில் தாம் கலந்து கொள்ள வில்லை எனத் தெரிவித்துள்ளனர். எனினும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்படி 11 குடும்பத்தினரும் அவர்களுடைய வீடுகளில் தனிமை படுத்திவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களுக்கான மருத்துவம், சுகாதாரம், உலர் உணவு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.