Tamil News
Home செய்திகள் மோடியின் தயவை நாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

மோடியின் தயவை நாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஈழத் தமிழர்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நாளை (09ஆம் திகதி) கொழும்பில் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் மாலைதீவு விஜயத்தை முடித்து விட்டு இந்தியா செல்லும் வழியில் இலங்கை செல்லவுள்ளார்.  சிறிலங்கா அதிபர் சிறிசேனவின் அழைப்பை ஏற்று சிறிலங்கா செல்லும் மோடிக்கு, அங்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மோடி, சிறிலங்கா அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version