Tamil News
Home செய்திகள் மொட்டுக் கட்சி வேட்பாளர் யாரென்று விரைவில் முடிவு – மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்

மொட்டுக் கட்சி வேட்பாளர் யாரென்று விரைவில் முடிவு – மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது விரைவில் தீர்மானிக்கப்படும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது உறுதிபட அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். கட்சியின் வேட்பாளர் யார் என்பதனை தீர்மானிக்கும் நோக்கில் கட்சியின் தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றபோதிலும் கட்சியின் இறுதித் தீர்மானம் அதிகாரபூர்வமாக எடுக்கப்படவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச கூறினார்.

இந்தநிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்குள் இரகசிய சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது என மொட்டு அணியின் உறுப்பினா்கள் பலா் தெரிவித்துவருகி்றமையால், இவ்விடயத்தில் கட்சிக்குள் முரண்பாடான நிலை உருவாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியிலேயே மகிந்த ராஜபக்ஷவின் கருத்து வெளியாகியுள்ளது.

Exit mobile version