மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை கண்டுபிடிப்பு

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக மோசமாக தங்களை ஏமாற்றியுள் ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சனாதிபதி மைத் திரிபால சிறிசேன தன்னுடைய ஆதரவை ஒக்டோபர் 18ஆம் திகதி மீளப்பெற் றதால் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தோம். இன்றைக்கு எங்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருகின்றது உண்மைதான். மக்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வ தென்று எங்களுக்கும் தெரியாமல் இருகின்றது.

ஆனால் நாங்கள் நம்பிக்கையிழக்கக் கூடாது. தொடர்ந்தும் நாங்கள் ஒரே போக்கில் செல்ல முடியாது. எங்களுடைய போக்குகளில் நாங்கள் மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.