Tamil News
Home செய்திகள் மைத்திரியின் கனடா பயணம் நிறுத்தம் – கனடா பிரதமர் புறக்கணிப்பு?

மைத்திரியின் கனடா பயணம் நிறுத்தம் – கனடா பிரதமர் புறக்கணிப்பு?

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரியின் கனடாவிற்கான பயணம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒட்டவாவிலுள்ள இடம்பெறவிருந்த மாநாடொன்றில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி ஜனாதிபதி கனடாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

எனினும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடோவை சந்திக்க நேரம் கிடைக்காமையே விஜயம் இரத்தானதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இடம்பெறும் ரணில் – மகிந்தா மோதலில் மைத்திரி மகிந்தாவுக்கு ஆதரவு அளிப்பதாக மேற்குலகம் குற்றம் சுமத்தி வருவதே இந்த புறக்கணிப்புக்கான காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

Exit mobile version