மே18 இனப்படுகொலை நாள் ஊர்திப் பவனி..! மக்கள் எழுச்சியுடன் அஞ்சலி

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை – தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவில் இருந்து நேற்றையதினம் ஆரம்பாகிய ஊர்திப் பவனியானது நேற்றிரவு வவுனியாவை வந்தடைந்து இன்று (13.05.2023) காலை வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில்  ஆரம்பமாகியிருந்ததுடன் மக்கள் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் குறித்த ஊர்திப்பவனியானது நகரை வலம்வந்ததுடன் மன்னார் நோக்கி பயணமானது.