மேலும் 67 பேர் கொரோனாவுக்குப் பலி – மொத்த இறப்பு 1,910 ஆக அதிகரிப்பு

மேலும் 67 பேர் கொரோனாவினால் மரணமானதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் ஆகக்கூடிய ஒருநாள் கொரோனா தொடர்புடைய மரண எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா இறப்பு மொத்த எண்ணிக்கை 1,910 ஆக உயர்ந்துள்ளது.