Tamil News
Home செய்திகள் மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் அடிபணிய மாட்டோம் – மகிந்தாவின் கட்சி

மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் அடிபணிய மாட்டோம் – மகிந்தாவின் கட்சி

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து புலம்பெயர் அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் கடுமையான விமசர்னங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் நாம் அவற்றிற்கு அடிபணியப் போவதில்லை என சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரட்நாயக்கா நேற்று (21) தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகவியலாளர்களிடம் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது நாட்டில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் வெளிநாடுகளின் கருத்துக்களைத் கேட்க முடியாது. கனடா மற்றும் அமெரிக்காவின் முடிவு-களை நாம் நடைமுறைப்படுத்த முடியாது.

இது எமது மக்களின் முடிவு, சில்வா சிறீலங்காவுக்கு முக்கியமானவர் 30 வருட போரை முடிவுக்கு கொண்டுவந்தவர். நாம் இங்கு இராணுவத்தளபதியை நியமிக்கும் போது புலம்பெயர் சமூகத்திற்கும், அமெரிக்காவுக்கும் வலிக்கின்றது.

நாம் எமது போர் வீரனை நியமிக்கும்போது அமெரிக்காவுக்கு எதற்கு வலிக்க வேண்டும். அதாவது தொலைவில் இருந்து இயக்கும் கருவியைக் கொண்டு சிறீலங்காவை இயக்க அவர்கள் முனைகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version