மூன்று இணையத்தளங்களை இலக்குவைத்து சைபர்தாக்குதல்; தமிழ் ஈழ சைபர் படையணி தாக்கியதாக தகவல்

தமிழ் ஈழ சைபர் படையணி என்ற அமைப்பு பல இணையத்தளங்களிற்குள் ஊருடுவி அவற்றை செயல்இழக்கச்செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கணிணி அவசரநிலை குழுவினர் இதனை அறிவித்துள்ளனர்.

மூன்று இணையத்தளங்களை இலக்குவைத்து சைபர்தாக்குதல் இடம்பெற்றதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் இணையத்தளம் இலங்கைக்கான சீன தூதரகத்தின் இணையத்தளம் ரஜரட்ட பல்கலைகழகத்தின் இணையத்தளம் ஆகியன மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப்புலிகளின் கொடிகளுடன் தமிழ் ஈழம் சைபர் படையணி முள்ளிவாய்க்கால் என குறிப்பிடப்பட்டுள்ளதாகஇலங்கையின் கணிணி அவசரநிலை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இணையத்தளங்களை மீள இயங்க செய்துள்ளோம் மேலதிக பாதிப்பினை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் எனஇலங்கையின் கணிணி அவசரநிலை குழுவினர் தெரிவித்துள்ளனர்