Tamil News
Home செய்திகள் மூதூரில் புதிய பிரதேச செயலகம்

மூதூரில் புதிய பிரதேச செயலகம்

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் துண்டாடப்பட்டு புதிய பிரதேச சபை அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், தோப்பூர் பிரதேச செயலகம் என்னும் பெயரில் புதிய பிரதேச செயலகம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கான அமைச்சரவை பத்திரமும் தயாராவதாகவும் அறியமுடிகின்றது.

இந்த தோப்பூர் பிரதேச செயலகத்தின் கீழ் இணைக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் பின்வருமாறு

கிளிவெட்டி, குமாரபுரம், பாரதிபுரம், புளியடிச்சோலை, விநாயகபுரம், கங்குவேலி, மேங்காமம், மருதநகர், பாலத்தடிச்சேனை, முன்னம்போடிவெட்டை, சிறிநாராயணபுரம் ஆகிய கிராமங்கள்  இணைக்கப்படும்.

இந்த வேலைகள் நடைபெற்று நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version