முஸ்லிம் அல்லாத அகதிகளின் குடியுரிமை விண்ணப்பங்களை வரவேற்கும் இந்திய அரசு

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகள் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிக்கையில்:

குடியுரிமைச் சட்டம் 1955-இன் பிரிவு 16-இன் கீழ் அளிக்கப்படும் அதிகாரத்தின் அடிப்படையில், 2014, டிசம்பர் 31-க்குள் இந்தியாவுக்கு வந்த ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினர்களான இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின் மதத்தவர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரை குடியுரிமைச் சட்டம் 1955-இன் பிரிவு 5 அல்லது 6-இன் கீழ் இந்திய குடிமக்களாக பதிவு செய்ய அதிகாரம் அளிக்கப்படுகிறது.