முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் – புகழ் வணக்கம் செலுத்திய வைகோ

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் 2 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இனப்படுகொலை நாளான மே 18-ஐ முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான வைகோ தமது அண்ணாநகர் இல்லத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்தினார். 

தனித்தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதி பூண்டார். இவ்வாறு மதிமுக தெரிவித்துள்ளது.