Home செய்திகள் முல்லைத்தீவில் 7 ஆயிரம் ஹெக்ரயர் காணியை சுவீகரிக்க முயற்சி-சார்ள்ஸ் நிர்மலநாதன்

முல்லைத்தீவில் 7 ஆயிரம் ஹெக்ரயர் காணியை சுவீகரிக்க முயற்சி-சார்ள்ஸ் நிர்மலநாதன்

காணியை சுவீகரிக்க முயற்சி
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் விவசாய மற்றும் பூர்வீக நிலங்களாகவுள்ள 7,092 ஹெக்ரயர் காணியை சுவீகரிக்க முயற்சி செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வன இலாகா திணைக்களம் முயற்சிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டியதுடன் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கோரிக்கை விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

வன இலாகா திணைக்களம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்களை அபகரிக்கின்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் இருக்கின்ற நிலங்களை குறி வைத்து அரசும் வன இலாகவும் மோசமாக செயற்படுகின்றன. இதன் ஒரு நடவடிக்கையாக வன இலாகா திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 2,749 ஹெக்ரயரும் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2,275 ஹெக்ரயரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 1,764ஹெக்ரயரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 530 ஹெக்ரயரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 286 ஹெக்ரயரும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 14 ஹெக்ரயரும்என மொத்தமாக 7,092ஹெக்ரயர் மக்களுடைய விவசாய நிலங்களை, அவர்களின் பூர்விக நிலங்களை சுவீகரிக்க வர்த்தமானி அறிவித்தல் விட முயற்சி எடுக்கப்படுகின்றது.

எனவே இந்த முயற்சியை உடனடியாகநிறுத்த வேண்டுமென வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்’’ எனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிலித்தார்.

Exit mobile version