Home செய்திகள் முல்லைத்தீவில் “ஈழ” பட்டம் விட்டவர் விசாரணையில்

முல்லைத்தீவில் “ஈழ” பட்டம் விட்டவர் விசாரணையில்

IMG 20240129 07104701 முல்லைத்தீவில் "ஈழ" பட்டம் விட்டவர் விசாரணையில்முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்புற இடம்பெற்றது.

வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர்.

குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம், கார்த்திகை பூவின் பட அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார்.

இதனை தாம், அவதானித்தாக கூறி முல்லைத்தீவு பொலிஸார் அவ் இடத்திற்கு சென்று குறித்த இளைஞனை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Exit mobile version