முப்பாச்சல் போட்டியில் தேசியரீதியில் சாதனைபடைத்த பூநகரி இளைஞன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடம்தோறும் நடத்தும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02-2020 அன்று வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் நேற்றய தினம் இடம்பெற்ற 20 – 29 வயது பிரிவில் முப்பாய்ச்சல் போட்டியில் 13.69 மீற்றர் பாய்ந்து 2ஆவது இடத்தினை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச இளைஞன் கேதீஸ்வரன் பவீந்திரன் கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளதோடு வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.