Tamil News
Home செய்திகள் மின்னல்தாக்கி 3 விவசாயிகள் பலி – முல்லைத்தீவில் நேற்று மாலை பரிதாபம்

மின்னல்தாக்கி 3 விவசாயிகள் பலி – முல்லைத்தீவில் நேற்று மாலை பரிதாபம்

முல்லைத்தீவு − தண்ணிமுறிப்பு வயல் பகுதியில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குமுழமுனை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இரவாகிய நிலையில், குறித்த 3 விவசாயிகளும் வீடு திரும்பாத நிலையில், அவர்களை தேடி உறவினர்கள் சென்றுள்ளனர்.

இதன்போதே, மூவரும் சடலமாக காணப்பட்டதை உறவினர்கள் அவதானித்துள்ளனர். குறித்த மூன்று விவசாயிகளின் சடலங்களும் அதே விவசாய நிலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Exit mobile version