மஹர சிறைச்சாலை மோதல்- பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் நேற்று உயிரிழந்தனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்து ராகமை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரே இவ்வாறு உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 107 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.