Tamil News
Home செய்திகள் மரங்களைக் காக்கும் அம்புலன்ஸ் சேவை

மரங்களைக் காக்கும் அம்புலன்ஸ் சேவை

சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் ஒன்று மரங்களை காக்கும் அம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த சேவையை சமீபத்தில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடக்கி வைத்தார்.

இயற்கை சீற்றங்களால் மரங்கள் வேரோடு சாய்ந்தாலோ, கட்டுமான பணிகளுக்காக மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றாலோ இந்த “Tree Ambulance”  சேவையை தொடர்பு கொண்டால் மரத்திற்கு எவ்வித சேதமுமின்றி கொண்ட செல்லப்படும். இந்த சேவையை தொடர்பு கொள்ள 9941006786 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் சென்னையில் தான் முதன்முதலாக இந்த வையைத் தொடங்கப்பட்டுள்ளது.

Exit mobile version