மன்னார் கடல் பகுதியில் கரையொதுங்கும் இந்திய மருத்துவக் கழிவுகள்

மன்னார் நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட வங்காலை  கடற்கரை ஓரங்களில் இன்றைய தினம் கரையொதுங்கிய மருத்துவக் கழிவுகளை அப்பகுதி மீனவர்கள் சேகரித்துள்ளார்கள்.

இந்த மருத்துவ கழிவுப் பொருட்களுக்கும் கொழும்பில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று மீனவர்கள் சந்தேகப்படுகின்றனர்.

IMG 20210617 133056 மன்னார் கடல் பகுதியில் கரையொதுங்கும் இந்திய மருத்துவக் கழிவுகள்

இந்த மருத்துவ கழிவு பொருட்கள் தொடர்பாக மன்னார் கடற்தொழில் அலுவலர் என்.பவநிதி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த மருத்துவ கழிவு பொருட்களுக்கும்  கொழும்பில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கழிவுப் பொருட்களுக்கும்  சம்பந்தம் இல்லை. குறித்த மருத்துவ கழிவு பொருட்களை கடற்கரை தூய்மையாக்கள் பிரிவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இவை இந்தியாவின் மருத்துவ கழிவு பொருட்கள். தற்போது தமிழ் நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால், இவ்வாறான கழிவு பொருட்கள் மன்னார் மாவட்ட கடற்கரையியோரங்களில் கரையொதுங்குகிறது.  மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று  தெரிவித்தார்.