Tamil News
Home செய்திகள் மன்னாரில் கொரோனா பரவல்; இரண்டு கிராமங்கள் முழுமையாக முடக்கப்பட்டன

மன்னாரில் கொரோனா பரவல்; இரண்டு கிராமங்கள் முழுமையாக முடக்கப்பட்டன

மன்னார் மாவட்டத்தில் பட்டித் தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் வலயங்களாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.

வெளி மாவட்டத்திலிருந்து கட்டட வேலைக்காக மன்னார் பட்டித்தோட்டப் பகுதிக்கு வந்த ஒருவருக்குக் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை கடந்த 8 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அவர் சென்று வந்த பகுதிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தல் வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இதையடுத்தே பட்டித் தோட்டம், பெரிய கடை பகுதிகளில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். அத்துடன் அப்பகுதியும் முடக்கப்பட்டுள்ளது.

Exit mobile version