Tamil News
Home செய்திகள் மட்டு. தமிழர் பகுதியில் சந்தேகமான நான்கு முஸ்லிம்கள்

மட்டு. தமிழர் பகுதியில் சந்தேகமான நான்கு முஸ்லிம்கள்

மட்டக்களப்பு வெல்லாவெளி புன்னக்குளம் வயல்வெளியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நான்கு முஸ்லிம்களை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்கள் மட்டு படுவான்கரை பெருநிலம் வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் உள்ள இனிப்பெட்டிவெளி என்னுமிடத்திலுள்ள வாவாயை அண்டிய பகுதியிலேயே  நடமாடினர்.

காலை 10 மணியளவில் இவர்களைக் கண்ட இளைஞர்கள் சந்தேகத்தில் விசாரித்த போது, இவர்கள் மாறுபட்ட விதமாக ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்ததால், இவர்களை பிடித்து வெல்லாவெளி படையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரணைக்காக படையினர் அவர்களை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

Exit mobile version