Tamil News
Home செய்திகள் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் அகதி அவுஸ்திரேலியாவில் தற்கொலை

மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் அகதி அவுஸ்திரேலியாவில் தற்கொலை

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்று புகலிடம்கோரிய தமிழ் இளைஞர் ஒருவர் பிரிஸ்பேர்னில் தற்கொலை செய்துள்ளார்.

மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதி மண்டூரைச் சேர்ந்த கிசோபன் ரவிச்சந்திரன் என்ற 25 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக குயின்ஸ்லாந்து புலம்பெயர் தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளதாக எஸ்பிஎஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

2012ம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ன் நகரங்களில் வாழ்ந்துவந்த கிசோபன், கடந்த டிசம்பர் 2ம் திகதி பிரிஸ்பேர்னில் வைத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கிசோபனின் நெருங்கிய நண்பரும் குயின்ஸ்லாந்து புலம்பெயர் தமிழர் அமைப்பைச் சேர்ந்தவருமான தயா தெரிவித்துள்ளார்.

Exit mobile version