மட்டக்களப்பில் முன்னாள் போராளி பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி  முன்னாள் போராளிகள் ஜனநாயகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட  உறுப்பினரான முன்னாள் போரளி ஒருவர்   பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த  முன்னாள் போராளியான நாகலிங்கம் பிரதீபனை மட்பாண்ட வீதி போரதீவு பிரதேசத்திலுள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு களுவாங்சிக்குடி  காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டில்  பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவித்த காவல்துறையினர்  அவரை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.