Tamil News
Home செய்திகள் மக்கள் பணியை நிறைவேற்ற வலுவான நாடளுமன்றம் அவசியம்: பஸில் ராஜபக்‌ஷ

மக்கள் பணியை நிறைவேற்ற வலுவான நாடளுமன்றம் அவசியம்: பஸில் ராஜபக்‌ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் நிறுவுனர் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ஷ சுமார் 3 மாதங்களின் பின்னர் நேற்று முன் தினம் நாடு திரும்பினார். இதையடுத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர்,

“மார்ச் மாதத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் கூறியுள்ளனர். மக்களுக்கான பணிகளை இந்த அரசு நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மையைக் கொண்ட ஒரு வலுவான நாடாளுமன்றம் அவசியம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியை இணைத்து பொதுஜன பெரமுன போட்டியிட்ட நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற, பொருத்தமான சின்னம் பயன்படுத்தப்படும்” என்றார்.

Exit mobile version