போராட்டத்தில் பங்கேற்க 32 பேருக்குத் தடை – மட்டக்களப்பு, கல்முனை நீதிமன்றங்கள் உத்தரவு

தமிழ்பேசும் மக்களுக்கு நீதி வேண்டி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 32 பேருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் கல்முனை நீதிவான் நீதிமன்றங்களால் இந்தத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வின்போது, மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன எனத் தெரிவித்து திருக்கோவில் பொலிஸார் தாக்கல்செய்த அறிக்கையின் பிரகாரம், திருக்கோவில் பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளத