Home செய்திகள் பொலிஸாரின் நடவடிக்கைகளினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சட்டத்தரணிகள் சங்கம்

பொலிஸாரின் நடவடிக்கைகளினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சட்டத்தரணிகள் சங்கம்

Police பொலிஸாரின் நடவடிக்கைகளினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சட்டத்தரணிகள் சங்கம்பொலிஸாரின் நடவடிக்கைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் இந்த விடயம் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சில நாள்களிற்கு முன்னர் நாரம்மலவில் இடம்பெற்ற சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குற்றச்செயல்களிற்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் விதம் குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ள போதிலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அதனை தொடர்வதில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு எதிராக அவசியமான சட்ட அமுலாக்கல் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம், இவற்றை உரிய சட்ட நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி முன்னெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version