Home செய்திகள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம்- படங்களின் தொகுப்பு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம்- படங்களின் தொகுப்பு

வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள்,தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து நடாத்திய பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம், தற்போது திருகோணமலை நோக்கி  நகர்ந்துகொண்டிருக்கின்றது.

IMG 7208 பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம்- படங்களின் தொகுப்பு

நேற்று பொத்துவிலில் தொடங்கிய பேரணியானது தாண்டியடி, கோமாரி,

திருக்கோவில்,தம்பிலுவில்,அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு,அட்டாளைச்சேனை,பாலமுனை,நிந்தவூர்,காரைதீவு,சாய்ந்தமருது,கல்முனை,

பாண்டிருப்பு,பெரியகல்லாறு ஊடாக களுவாஞ்சிகுடியை சென்றடைந்தது.பின்னர் அங்கிருந்து பேரணியானது தாழங்குடாவினை சென்றடைந்தது.

    

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு,

மனித உரிமை மீறல்கள், சிங்கள குடியேற்றங்கள், முஸ்லீம் மக்களின் ஜனாசாகளை எரிப்பது, பயங்கரவாத தடைச் சட்டம் ,

சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version