பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிளை விடுவிக்க தீர்மானம்

சிறைகளில் கொரோனா தொற்று பரவுவதைக் கருத்திற் கொண்டு கைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி 600 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும் பலர் கோரிக்கை  முன்வைத்து வருகின்ற நிலையில், கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என சிறைச்சாலை ஆணையாளர்  தெரிவித்துள்ளார்.