Home செய்திகள் பொதுத் தோ்தலுக்கான உபாயங்களுடன் நாடு திரும்புகிறாா் பசில் – உதயங்க வீரதுங்க தெரிவிப்பு

பொதுத் தோ்தலுக்கான உபாயங்களுடன் நாடு திரும்புகிறாா் பசில் – உதயங்க வீரதுங்க தெரிவிப்பு

இராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ஸபொதுத் தேர்தலை முன்கூட்டி நடத்துவதே பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு என்றும் அதற்கான வியூகத்துடன் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் எனவும் ராஜபக்ஷகளின் உறவினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் பெருவெற்றி பெறச்செய்ததில் பசில் ராஜபக்ஷவின் புத்தி சாதுரியம் மிகவும் முக்கியமானது. பசில் ராஜபக்‌ஷ மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்புவது, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அழகுபார்ப்பதற்காக அல்ல.

பொதுஜன பெரமுனவை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுகளுக்கு அமைவாகப் பொதுத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும். பொதுத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கான அறிவிப்பினை ஜனாதிபதியே செய்ய வேண்டும்.

இருப்பினும், பசில் ராஜபக்‌ஷ நாடு திரும்பியதும் இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இதனடிப்படையில், பொதுத்தேர்தல் நடத்தப்படும் போது, அதற்கான வெற்றி வியூகங்களை வழங்கும் பிரதான பணியை பசில் ராஜபக்‌ஷவே முன்னெடுப்பார். மேலும், பெரமுனவின் உறுப்பினர்களில் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவாக நிற்கின்றபோதும், முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அதில் ரணில் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே பொதுத்தேர்தலை நடத்துவதே பொருத்தமான நகர்வாக இருக்கும்” என்றும் உதயங்க வீரதுங்க தெரிவித்தாா்.

Exit mobile version