பொதுத் தேர்தலை உடன் நடத்துவது சிறந்தது- மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி ஒரு கட்சியிலும், பிரதமர் வேறொரு கட்சியிலும் இருக்கும் போது நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாது.

இதனால் பொதுமக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து பொதுத் தேர்தலை உடன் நடத்துவது சிறந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாராஹென்பிட்டி அபேராம விஹாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில், கலந்துரையாடுவதற்காக பிரதமர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று மாலை பாராளுமன்றத்தின் கட்டிடத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அமைச்சர் வஜிர் அபேவர்த்தன இதனைத் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.