பேரினவாதிகளால் 27 முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் – செய்திகள் இருட்டடிப்பு

அண்மையில் சிங்கள பேரினவாதிகள், முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் மீதும்,அவர்களின் குடியிருப்புகள் மீதும் மேற்கொண்ட தாக்குதல்களில் பாரியளவிலான பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இச்செய்திகள் ஓரளவிற்கு வெளிவந்தபோதும் முஸ்லீம்களின் வழிபாட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லீம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலில், குருநாகல் மாவட்டத்தில் 23 பள்ளிவாசகளும் ஒரு அரபுக் கல்லூரியும் தாக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 3 பள்ளிவாசல்களும்,கம்பகாவில் 1 பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன . இத்தாக்குதல்களில் பள்ளவாசல்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கிருந்த புனித திருக்குரான் நூகளும் எரியூட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.musque fai பேரினவாதிகளால் 27 முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் - செய்திகள் இருட்டடிப்பு

 

இந்த சம்பவங்களை வெளியுலகிற்கு குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுக்கு தெரியாமல் மறைக்க சிறிலங்கா அரசும் அவர்களுக்கு துணைபோகும் முஸ்லீம் அரசியல் வாதிகளும் முயல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.