இதனையடுத்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
வாக்குமூலத்தை வழங்கியதைத் தொடர்ந்து, ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பல விடயங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில், அதற்காக அணிவகுப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.