குளிரூட்டப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் காணப்பட்ட 12 குடியேற்றவாசிகளை உயிருடன் மீட்டுள்ளதாக பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பழங்கள் காய்கறிகள் அடங்கிய கொள்கலனிற்குள் 12 குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெல்ஜியத்தையும் நெதர்லாந்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையொன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிற்குள் இருந்து 11 சிரிய பிரஜைகளையும் சூடானை சேர்ந்த ஒருவரையும் உயிருடன் மீட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலந்தை சேர்ந்த டிரக்கின் சாரதி கொள்கலன் குறித்து சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு அறிவித்ததன் காரணமாகவே உள்ளே குடியேற்றாவாசிகள் இருப்பது தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் குடியேற்றவாசிகள் எந்த நாட்டை நோக்கி பயணித்தனர் என்பது இதுவரை தெரியவரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் பிரிட்டனில் கொள்கலனிற்குள் 39 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட பின்னர் உயிருடன் 12 பேர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.