பெரு நாட்டில் 3000 ஆண்டுகள் பழைமையான ஆலயம் கண்டுபிடிப்பு

பெரு நாட்டில் சுமார் 3000 ஆண்டுகள் பழைமையான ஆலயம் ஒன்று தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரு நாட்டின் கடலோர மாவட்டமான லாம்பேயிக்கியூ என்னும் இடத்திலேயே பூமிக்கு அடியில் இந்த ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு 21 கோபுரங்கள் இருக்கின்றன. 131 அடி நீளமும் 183 அடி அகலமும் கொண்ட இந்த ஆலயத்தில் வாள் போன்ற புராதனப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பெரு நாட்டில் தண்ணீரைத் தெய்வமாக வணங்கிய சான்றுகளும் இங்கே கிடைக்கப்பெற்றுள்ளது.  பண்டைய பெரு நாட்டின் கலை நுட்பம் மிக்க கைவினை வல்லுநர்களான Chimu இனத்தவரின் பண்பாட்டு அடையாளமாக இந்த ஆலயம் விளங்குகின்றது. அவர்கள் தண்ணீரை கடவுளாக வணங்கியுள்ளனர். இதேபோல் சிந்தி இன மக்களும் ஜலே லால் என்று கடல் தேவனை வணங்கியதாகவும் மரபில் உள்ளது.

இப்படியான 3000 ஆண்டு பழைமையான ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது  மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.