இலங்கை தேர்தல் வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் அல்லது பெண்களின் ஈடுபாடுகள் குறைவாகவே காணப்பட்டு வருகின்றமையினை வரலாறுகள் உணர்த்தி நிற்கின்றது ஆனால் இன, மொழி மத பேதங்களை கடந்து பெண் என்ற ஒருநிலையில் பார்க்கும்போது அனைத்து பெண்களும் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.
இந்நிலை மாறவேண்டும் இந்நிலையில் இருந்து பெண்களை வெளிக்கொண்டு வருவதன் ஊடாக ஆளுமை திறன்கள் உள்ள பெண்களை இனங்கண்டு அவர்களின் தேர்தல் ஈடுபாடுகளை அதிகரிக்க செய்தலின் ஊடாக எதிர்காலத்தில் பெண்களின் பங்களிப்பை கூட்டுவதை நோக்கமாக கொண்டும் இலங்கை மக்கள் தொகையில் 52 வீதமாக இருக்கும் பெண்களை தேர்தலின் பங்களிக்க செய்து அவர்களின் அரசியல் பலத்தின் ஊடாக பெண்களின் அனைத்துவிதமான உரிமைகளையும் அனுபவிக்க செய்வதனையும் நோக்காக கொண்டு இன்றைய தினம் பெண்களை தேர்தல்களில் பங்களிக்க செய்யும் எனும் தொனிப்பொருளின் ஊடான கருத்தரங்கினை மேற்கொண்டிருந்தனர்.